பஹ்ரைன் மண்டல பொதுக்குழு
அல்லாஹ்வின் உதவியால்,
நேற்று (01-01-2012) மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு பஹ்ரைன் மண்டல தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கான பொதுக்குழு கூட்டப்பட்டது. இதன் முக்கிய நோக்கம், நமது ஜமாஅத்திற்காக தலைமையில் சொந்த கட்டிடம் வாங்குவதற்காக நம்மாள் எந்த அளவில் பொருளாதார உதவி செய்ய முடியும் என்பதற்காகவே.
நேற்று (01-01-2012) மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு பஹ்ரைன் மண்டல தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கான பொதுக்குழு கூட்டப்பட்டது. இதன் முக்கிய நோக்கம், நமது ஜமாஅத்திற்காக தலைமையில் சொந்த கட்டிடம் வாங்குவதற்காக நம்மாள் எந்த அளவில் பொருளாதார உதவி செய்ய முடியும் என்பதற்காகவே.
சகோதரர் ஆற்றிய உரையை தொடர்ந்து அதற்கு மேலும் தெம்பூட்டும் வகையில் அவரை தொடர்ந்து நமது மண்டல தலைவர் சகோ. முபாரக் அவர்கள் ஆற்றிய உரை அமைந்தது.
இவர் தமது உரையின் ஆரம்பமாத்திரத்திலேயே நமது ஜமாஅத்தின் கொள்கை என்ன? இந்த கொள்கை எப்படி பட்ட கொள்கை? அல்லாஹ்வும் அவனது துதரும் காட்டித் தந்த அடிப்படையில் தான் உள்ளதா? என்பதை ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.
மேலும், இந்த கொள்கையை 1980களில் சொல்ல ஆரம்பித்து இன்று எப்படிபட்ட தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் எடுத்து விளக்கினார். அதனை தொடர்ந்து நமது ஜமாஅத் எப்படிபட்ட வேலைகளை எல்லாம் செய்து வருகிறது.
இதை கேட்ட உடனேயே நமது நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் விரைந்து வந்து தங்களால் முடிந்த அளவுக்கு பொருளாதர உதவிகளை செய்கிறோம் என்றும், ஒவ்வோருவரும் தங்களால் எவ்வளவு உதவி செய்ய முடியும் என்றும் துண்டுச் சீட்டில் எழுதி பொருளாளர் அவர்களிடம் கொடுத்தனர்.
குழுமியிருந்த அனைத்து சகோதரர்களும் அல்லாஹ்விற்காக அழகிய கடன் வழங்கிய திருப்தியில் அனைவரும் கலைந்து சென்றனர்.
அல்லாஹ்வுக்கு யாரேனும் அழகிய கடன் வழங்கினால் அதை அவருக்கு அவன் பன்மடங்காக வழங்குவான். அவருக்கு மகத்தான் கூலியும் உண்டு. (அல் குர் ஆன் 57 - 11)





