Post

வாராந்திர ரமாளான் சிறப்பு நிகழ்ச்சி


 



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், ரமளான் மாதம் முழுவதும் நமது மண்டல சார்பாக இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டு அதைத் தொடர்ந்து ஒரு சிறிய உரையும் தாயகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட சகோ. முஹம்மது ஒலி அவர்கள் நிகழ்த்தினர்கள்.



மேலும், வியாழக்கிழமையன்று இரவுத் தொழுகைக்கு பிறகு சுமார் 11 மணியளவில் ரமளான் சிறப்பு நிகழ்ச்சி பஹ்ரைன் மண்டல தலைமைகத்தில் நடைபெற்றது.



இதில் ஆரம்பகட்டமாக, நமது மண்டல ஆலோசகர் சகோ. அப்துல் ஹமீது அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத் செய்யும் அறிய பணி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி, அதில் நமது ஜமாஅத் செய்யும் செயல்பாடுகள் பற்றியும் விளக்கி கூறினார்.



அதை தொடர்ந்து தாயகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட சகோ. முஹம்மது ஒலி அவர்கள் இஸ்லாமிய அடிப்படை கல்வி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அந்த உரையை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சி மற்றும் விஷேச சிறப்பு நிகழ்ச்சியும் நமது மண்டலம் சார்பில் நிகழ்த்தப்பட்டது.



இந்த நிகழ்ச்சி சுமார் அதிகாலை 2 மணியளவில் நிறைவுபெற்றது. இதன் பிறகு ஸஹர் உணவு பரிமாற்றத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.



இதில் ஏராளமான தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனைடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!