வாராந்திர நிகழ்ச்சி - 13-01-2012
அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு 13-01-2012 அன்று நடைபெற்றது.
இவர் தமது உரையில்அல்லாஹ் தமது குர்ஆனில் பெற்றோர்களை பேண வேண்டும் என்று கட்டளையிடுகிறான். ஆனால் இன்றைய கால கட்டத்தில் நாம் அதற்கு நேர் மாற்றமாக எப்படியெல்லாம் செயல்படுகிறோம் என்பதை மிக அழகாக விளக்கி கூறினார்கள்.
மேலும் இதிலிருந்து விலகி அல்லாஹ்விற்கு பயந்த முஸ்லீம்களாக வாழ துஆ செய்து தமது உரையை முடித்தார்.
இதில் நமது ஹித் கிளை தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
அதனை தொடர்ந்து பெண்களுக்காக நடத்தப்பட்டு வரும் தஃப்ஸிர் வகுப்பில் தேர்வு நடைபெற்று, இதில் சிறந்த முறையில் தேர்வு எழுதிய சகோதரிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அதை அவர்களுடைய கணவன்மார்கள் பெற்றுக் கொண்டனர். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!





