Post

வாராந்திர நிகழ்ச்சி - 02-12-2011

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல வாராநிர நிகழ்ச்சி நமது மண்டல் நிர்வாகிகளின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இன்றைய நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து சகோ. அப்துல் கரீம் MISc அவர்கள் "முஹர்ரம் மாதமும் அமல்களும்" என்ற தலைப்பில் ஆன்லைன் மூலம் புரேக்ஜடர் உதவி கொண்டு உரை நிகழ்த்தினார்கள்.

இதில் சகோதரர் அவர்கள் முஹர்ரம் மாதத்தில் செய்யப்படும் அனாச்சாரங்களையும், இதில் நமது முஸ்லிம் சகோதரர்கள் செய்யும் பித்அத்-தான விஷயங்களை பற்றியும் எடுத்துகூறி அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கினார்கள்.

மேலும், ஆஷுரா நோன்பு பற்றியும் அதன் பின்னனி பற்றியும், இந்த ஆஷுரா தினம் இன்றைய நமது முஸ்லீம்கள் சகோதரர்கள் மத்தியில் எப்படிபட்ட தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதையும் எடுத்துரைத்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கல்ந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!