பஹ்ரைன் மண்டல மாதாந்திர மசூரா
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....,
கடந்த 04-09-2011 ஞாயிறன்று பஹ்ரைன் மண்டல தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாதாந்திர மசூரா அல்லாஹுவின் கிருபையால் கூடியது. மண்டல நிர்வாகிகள் மற்றும் தாயகத்திலிருந்து வருகை புரிந்த சகோதரர் முஹம்மது ஒலி அவர்களும் கலந்து கொண்டனர்.
இதில் மண்டல தலைவர் சகோதரர் முபாரக் உம்ரா பயணத்தின் போது ஏற்பட்ட குறை, நிறைகள் பற்றி நம்மிடம் எடுத்துரைத்தார். இன்ஷா அல்லாஹ் இனி வரும் காலங்களில் குறைகள் ஏதும் ஏற்படாதவாறு சகோதரர்கள் அனைவரும் ஆலோசனை வழங்கினர்.
அதன் பின்னர் ரமலானின் போது ஏற்பட்ட குறை, நிறைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. அல்ஹம்ந்துலில்லாஹ் கடந்த கால ரமலானை விட இந்த ரமலானில் ஏற்பட்ட முன்னேற்றங்களை சகோதரர்கள் மத்தியில் காணப்பட்டது. இன்ஷா அல்லாஹ் இனி வரும் ரமலானில் இன்னும் அதிகமாக உழைக்க சகோதரர்கள் அனைவரும் ஆலோசனை வழங்கினர்.
இறுதியாக, உம்ரா நிறைவேற்றிவிட்டு அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் திரும்பவும் பஹ்ரைனுக்கு வருகை புரிந்த சகோதரர் முஹம்மது ஒலி அவர்களை வைத்து ஒரு மாதம் முழு நேர தாவா செய்ய ஆலோசனை கேட்கப்பட்டது.






